தொடக்கம்
வருடங்களுக்கு முன்பு, அனைத்தும் நொடியில் நடந்தது,
இச் சிறுவன் ஓர் மனிதன் ஆனேன்:
சட்டென என் வாழ்க்கைத் துவங்கியது!
வையகம் விரிந்தது என் முன்—அப்படி
குதிரைகளுடன் நின்றிருந்தான் அந்த உழவன்
முதல் மலை முகட்டில் வியர்வையுடன்,
ஆறோடும் மண்ணை விட்ட பிறகு
கீழே பள்ளதாக்கில் உழுதான்,
உழுவதற்கு ஒரு மலைப் பகுதியை காண்கிறான்,
வறண்ட பாறை மழுங்கினால் மதிய உணவு,
காற்றில் இடி முழக்கம்,
தலைக்கு மேலே உச்சியில் கருமை,வெறுமை
காத்திருக்கிறான்
—துணிவிருந்தால் அவன் உழுது பார்க்கட்டும்!